உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் விராட் கோலி, புஜாரா கவனம் ஈர்ப்பார்கள் : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிறப்பாக ஆடியிருப்பதால் ரிக்கி பாண்டிங் கருத்து
Jun 1 2023 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விராட் கோலி மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் முக்கிய வீரர்களாக இருப்பார்கள் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கணித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளன. இந்தப்போட்டியில், விராட்கோலியும், புஜாராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம் என்று ரிக்கிபாண்டிங் கணித்துள்ளார். இரண்டு பேரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.