20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் இறுதி போட்டி : ஹர்திக் பாண்டியாவை சேர்த்திருக்க வேண்டும் என ரிக்கிபாண்டிங் கருத்து
May 31 2023 6:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஹார்திக் பாண்டியாவை சேர்த்திருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கிபாண்டிங் தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் லீக் சுற்றில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. ஜூன் 7ஆம் தேதி இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் இறுதிப் போட்டி துவங்கி நடைபெறவுள்ளது. 20 வருடங்களுக்கு பிறகு ஐசிசி பைனலில் இரு அணிகளும் மோத உள்ளதால், இப்போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ''டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் நிச்சயம் ஹார்திக் பாண்டியாவை சேர்த்திருக்க வேண்டும் என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். அவரது உடல்நிலை, டெஸ்ட் விளையாடும் அளவுக்கு பிட்டாக இல்லை என கூறுகிறார்கள், ஆனால் ஐபிஎலில் அனைத்து போட்டிகளிலும் அபாரமாக பந்துவீசினார். ஆகையால், ஒரேயொரு டெஸ்டில் சேர்ப்பதில் தவறில்லை'' என ரிக்கிபாண்டிங் தெரிவித்துள்ளார்.