சென்னையில் 5 நாட்களாக நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் : பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும், ஆண்கள் பிரிவில் டி.ஜே. வைஷ்ணவா கல்லூரியும் முதலிடம் பிடித்தது
Jan 28 2023 10:25AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் மற்றும் டி.ஜே. வைஷ்ணவா கல்லூரி அணிகள் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் நடத்திய பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன் ஷிப் போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் போட்டிகள் நடத்தப்பட்டன. ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் லீக், நாக் அவுட் முறையில் நடந்தன. இந்நிலையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பெண்களுக்கான இறுதி போட்டியில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் அணியும், பி.கே.ஆர்.கல்லூரி அணியும் மோதின. எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக அணி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆண்களுக்கான இறுதி போட்டியில் டிஜே வைஷ்ணவா கல்லூரி அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.