மகளிர் டி-20 போட்டிகளுக்கான டபிள்யூ.பி.எல் உரிமங்கள் ரூ.4,669 கோடிக்கு ஏலம் போனதாக பிசிசிஐ அறிவிப்பு
Jan 25 2023 5:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகளிர் டி-20 போட்டிகளுக்கான டபிள்யூ.பி.எல் உரிமங்கள் 4 ஆயிரத்து 669 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. முதல் அணியாக ஆயிரத்து 289 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்து அகமதாபாத்தின் அதானி ஸ்போர்ட்ஸ்லைன் பிரைவேட் லிமிடெட் உரிமம் பெற்றுள்ளது. அடுத்ததாக மும்பையை சேர்ந்த இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் 912 புள்ளி 99 கோடி ரூபாய்க்கும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 901 கோடி ரூபாய்க்கும், டெல்லியின் ஜே.எஸ். டபிள்யூ. ஜி.எம்.ஆர். கிரிக்கெட் 810 கோடி ரூபாய்க்கும், லக்னோவின் கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் 757 கோடி ரூபாய்க்கும் என மொத்தம் ஐந்து அணிகள் உரிமங்களை பெற்றுள்ளன.