19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி - இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Jan 23 2023 10:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்காவின் பாட்செஃப் ஸ்ட்ரூம் நகரில் நடைபெற்ற சூப்பர் சிக்ஸ் சுற்றின் குரூப்-1 பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணியும், இலங்கை அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 59 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இந்திய வீராங்கனை பார்ஷவி சோப்ரா, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பின்னர், 60 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 7 புள்ளி 2 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம், குரூப்-1 பிரிவுக்கான புள்ளிகள் பட்டியலில் இந்திய மகளிர் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.