உலகக் கோப்பை ஹாக்கி தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா - நாக் அவுட் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் போராடி தோல்வி - ரசிகர்கள் ஏமாற்றம்
Jan 23 2023 10:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உலகக் கோப்பை ஹாக்கி நாக்அவுட் சுற்று போட்டியில், இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நேற்றிரவு நடைபெற்ற இப்போட்டியில், 'டி' பிரிவில் 2வது இடம் பிடித்த இந்திய அணி, 'சி' பிரிவில் 3வது இடம் பிடித்த நியூசிலாந்து அணியுடன் மோதியது. இதில் வென்றால் மட்டுமே காலிறுதிக்கு முன்னேற முடியும் என்பதால் இரு அணிகளும் கடுமையாகப் போராடின. இதனால் ஆட்டநேர முடிவில், இரு அணிகளும் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்தன. இதனையடுத்து, வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷுட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில், 5-4 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, நாக்அவுட் சுற்றுடன் வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.