இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி-20 போட்டி : 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி

Sep 23 2022 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது 20 ஓவர் போட்டி கராச்சியில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மொயின் அலி பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியினர், சீரான வேகத்தில் ரன் சேர்த்தனர். முடிவில் 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தனர். பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் பாபர் அசாம் மற்றும் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் ஆகியோர் அதிரடி காட்டி விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் அணியை வெற்றி பெற வைத்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி 19.3 ஒவர்களில் விக்கெட் இழப்பின்றி 203 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இரண்டாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. கேப்டன் பாபர் அசாம் 110 ரன்களும், முகமது ரிஸ்வான் 88 ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 7 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-1 என்ற கணக்கில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் சமநிலையில் உள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00