சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களுடன் திரும்பியவர்களுக்கு உற்சாக வரவேற்பு
Aug 10 2022 11:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேபாளம் நாட்டில் நடைபெற்ற சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்று மதுரை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தோ - நேபாள் சர்வதேச அளவிலான போட்டிகள் கடந்த ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரை நடைபெற்றது. இதில் மதுரையில் இருந்து 21 மாணவிகள் மற்றும் 3 மாணவர்கள் கலந்துகொண்டனர். பளுத்துக்குதல், சிலம்பம், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், என பல்வேறு போட்டிகளில் 16 மாணவிகள் மற்றும் 3 மாணவர்கள் தங்க பதக்கமும், 5 மாணவிகள் வெள்ளி பதக்கமும் வென்றனர்.