தூத்துக்குடியில் நடைபெற்று வரும் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் - மாணவர்கள் ஆர்வம்
May 20 2022 2:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடியில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வரும் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், ஆண்டுதோறும் மாணவர்களுக்கு கோடைகால கிரிக்கெட் பயிற்சி வழங்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கிரிக்கெட் பயிற்சி வழங்கப்படவில்லை. இந்தநிலையில், இந்த ஆண்டு கோடைகால கிரிக்கெட் பயிற்சி தூத்துக்குடி விகாசா பள்ளியில் தொடங்கியுள்ளது. இதில், மாணவர்களுக்கு பேட்டிங், பீல்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 15 நாள் நடக்கும் இந்த பயிற்சி முகாமில், தூத்துக்குடி, திருச்செந்தூர், காயல்பட்டினம், கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.