உபர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியா அபாரம் - அமெரிக்காவை வீழ்த்தி காலியிறுதிக்கு முன்னேற்றம்
May 10 2022 4:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாய்லாந்தில் நடைபெற்ற உபர் கோப்பைக்கான மகளிர் பேட்மிண்டன் தொடரில் அமெரிக்க அணியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி, இந்திய அணி காலிறுதிக்கு முன்னேறியது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உபர் கோப்பைக்கான காலியிறுதிக்கு முந்தைய சுற்று மகளிர் பேட்மிண்டன் நடைபெற்றது. அமெரிக்காவுக்கு எதிராக களமிறங்கிய இந்தியா, இன்று மகளிர் ஒற்றையர் பிரிவில் விளையாடியது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, அமெரிக்காவின் ஜென்னியை 21-10, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். இதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா-த்ரீஷா இணை, அமெரிக்காவின் கார்பெட்-அல்லிசன் இணையை 21-19, 21-10 என்ற கணக்கில் தோற்கடித்தது. இதேபோல் மற்றொரு பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஆகார்ஷியிடம், அமெரிக்க வீராங்கனை எஸ்தர் தோல்வியடைந்தார். அடுத்தடுத்த வெற்றிகள் மூலம் இந்திய பேட்மிண்டன் அணி, அமெரிக்க பேட்மிண்டன் அணியை 4-1 என்ற கணக்கில் தோற்கடித்து காலிறுக்கு முன்னேறியது.