சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைப்பு : ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவிப்பு
May 6 2022 2:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா பரவல் காரணமாக ஆசிய விளையாட்டு போட்டிகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது.
சீனாவில் ஹாங்ஷூ நகரில் செப்டம்பர் மாதம் 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற இருந்தன. சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தலைநகர் பிஜீங் உள்ளிட்ட பல இடங்களில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த 19-வது ஆசிய விளையாட்டு போட்டி ஒத்திவைக்கப்படுவதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது. புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.