ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறுவது யார்? : டெல்லி - சென்னை அணிகள் இன்று மோதல்
Oct 10 2021 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். தொடரில், இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்று இன்று நடைபெறுகிறது. இதில் சென்னை - டெல்லி அணிகள் மோதுகின்றன.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று போட்டிகள், நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், டெல்லி, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிச்சுற்று போட்டி துபாயில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது. புள்ளிப் பட்டியலில் முதல் 2 இடங்களைப் பிடித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும் என்பதால், ரசிகர்களிடையே மிகுந்த ஆவல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு, துபாயில் நடைபெற்ற 10 ஆட்டங்களில், 2-வது பேட்டிங் செய்த அணியே 7 முறை வெற்றி பெற்றுள்ளதால், இன்றைய போட்டியில் டாஸ் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.