கேலோ திட்டத்தில் சிலம்பாட்டம் சேர்ப்பு - சங்கங்கள் வரவேற்பு : மாநில அளவில் சிலம்ப போட்டி நடத்த முடிவு
Sep 20 2021 11:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் கேலோ திட்டத்தில் சிலம்பாட்டம் சேர்க்கப்பட்டது குறித்து சிலம்பாட்ட சங்கங்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. திருச்சியில் மாநில அளவிலான சிலம்பப் போட்டியை நடத்தவும் முடிவு செய்துள்ளன.
வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டில் சிலம்பாட்டத்தையும் சேர்த்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு கேலோ திட்டத்தில் சிலம்பாட்டத்தை சேர்த்து மத்திய ஆணை பிறப்பித்தது. இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த சிலம்பாட்ட சங்கங்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்துள்ளன.
திருச்சியில் வரும் டிசம்பர் மாதம் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி, மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியை நடத்தவும் முடிவு செய்துள்ளன.