ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டி - இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் வெற்றி
Jul 24 2021 1:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றிபெற்றுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் டென்னிஸ் போட்டியின் ஒற்றையிர் பிரிவு ஆட்டம் ஒன்றில், இந்திய வீரர் சுமித் நாகல், உஸ்பெகிஸ்தான் வீரர் இஸ்டோமினை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சுமித் நாகல், உஸ்பெகிஸ்தான் வீரரை திணறடித்தார். இறுதியில், 6-க்கு 4, 6-க்கு 7, 6-க்கு4 என்ற செட் கணக்கில் சுமித் நாகல் வெற்றிபெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.