டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : ஆடவருக்கான கால்பந்தாட்டத்தில் பிரேசில் அணி வெற்றி - பலம் வாய்ந்த ஆர்ஜெண்டினா ஆஸி.-யிடம் அதிர்ச்சி தோல்வி
Jul 23 2021 12:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜப்பான் ஒலிம்பிக் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் கால்பந்து போட்டியில், ஜெர்மனி அணியை பிரேசில் அணி தோற்கடித்தது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகலமாகத் தொடங்க உள்ள நிலையில், பேஸ்பால், கால்பந்து, softball உள்ளிட்ட போட்டிகள் நேற்றே தொடங்கி விட்டன. இதில், ஆடவருக்கான கால்பந்து போட்டியில், பிரேசில் அணியை, ஜெர்மனி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், பிரேசில் வீரர்களின் அனல் பறக்கும் ஆட்டத்தை சமாளிக்க முடியாமல் ஜெர்மனி வீரர்கள் திணறினர். இறுதியில், பிரேசில் அணி, 4-க்கு 2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை தோற்கடித்து, அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
மற்றொரு போட்டியில் பலம் வாய்ந்த ஆர்ஜெண்டினாவை, ஆஸ்திரேலிய அணி எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர்களின் அதிரடி ஆட்டத்தால், ஆர்ஜெண்டினா வீரர்கள் திணறினர். போட்டியின் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 2-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் ஆர்ஜெண்டினாவை அதிர்ச்சி தோல்வியடைய செய்தது.