கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி : 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தல் வெற்றி
Apr 22 2021 11:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
14-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டு பிளெஸ்ஸி 95 ரன்களும், ரூதுராஜ் 64 ரன்களும், மொயின் அலி 25 ரன்களும் எடுத்தனர்.
221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து திணறியது. எனினும் அந்த அணியின் வீரர்களான தினேஷ் கார்த்திக், ரஸல், கம்மின்ஸ் ஆகியோர் நிலைத்து நின்று விளையாடி அணியை தோல்வியின் பாதையில் இருந்து மீட்டனர். அடுத்து வந்த வீரர்களும் ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறியதால், கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 202 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.