அகமதாபாத்தில் இன்று தொடங்கியது 4-வது டெஸ்ட் கிரிக்கெட் - இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து திணறல்
Mar 4 2021 12:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் அகமதாபாத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.
4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில், இந்தியா 2-1 என முன்னிலை பெற்றுள்ள நிலையில், 4வது மற்றும் கடைசி டெஸ்ட், அகமதாபாத்தில் உள்ள மொதேரா மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே அந்த அணி, தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டை இழந்தது. கேப்டன் ஜோ ரூட், வந்த வேகத்தில் நடையைக் கட்டினார். இதனால் இங்கிலாந்து நெருக்கடிக்கு உள்ளானது. பின்னர் ஜோடி சேர்ந்த பேர்ஸ்டோவும், வென்ஸ்டோக்ஸும் கவனமுடன் விளையாடி விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தினர். சற்று முன் வரை இங்கிலாந்து அணி, 3 விக்கெட்டுக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது.