ஜப்பானில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் : சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் அறிவிப்பு

Jan 24 2021 2:47PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் ஏற்கெனவே திட்டமிட்டபடி நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் Thomas Bach தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கடந்த ஆண்டு நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக இப்போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டன. கொரோனா நோய்த்தொற்று முடிவு பெறாத நிலையில், போட்டிகள் ஒத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுவதை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் Thomas Bach மறுத்துள்ளார். ஏற்கெனவே திட்டமிட்டபடி, ஜூலை மாதம் 23ம் தேதி போட்டிகள் தொடங்கும் என்று தெரிவித்தார். போட்டியில் பங்கு கொள்ளும் விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். வீரர்களுக்கு தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளி மற்றும் உடல் பரிசோதனை என பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் Thomas Bach தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00