சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை மண்டியிடச் செய்த இந்திய அணிக்கு பிரதமர் மோதி வாழ்த்து - வீரர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது கிரிக்கெட் வாரியம்
Jan 19 2021 1:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சாதித்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஆஸ்திரேலியாவில் இந்திய அணி பெற்றுள்ள இந்த வெற்றியை தாங்கள் அனைவரும் மிகவும் ரசித்து மகிழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியின் குறிப்பிடத்தக்க வெற்றிக்கான போராட்டமும், அதற்கான அம்சங்களும் போட்டி முழுவதும் நிறைந்து காணப்பட்டதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய வீரர்கள் அனைவருக்கும் பாராட்டுகளையும், இனிவரும் போட்டிகளுக்கு நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.