அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிக் வெளியேற்றம் - புள்ளிகளை இழந்த கோபத்தில் நடுவரை பந்தால் தாக்கியதால் நடவடிக்கை
Sep 7 2020 9:13AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடுவரை தாக்கியதற்காக உலகின் முதல் நிலை ஜோகோவிக், அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸின் 4-வது சுற்று ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிக், ஸ்பெயின் வீரரான பப்லோ கரேலோ பஸ்டாவை எதிர் கொண்டார். ஆட்டத்தின் முதல் செட்டை 5-க்கு 6 என்ற கணக்கில் இழந்ததால், பொறுமையை இழந்த ஜோகோவிக், பெண் நடுவரை பந்தால் தாக்கினார்.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க ஓபன் டென்னிசில் இருந்து ஜோகோவிக் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து தனது சமூக வலைதள பக்கங்களில் விளக்கமளித்துள்ள ஜோகோவிக், நடந்ததை நினைத்து தான் வருத்தப்படுவதாகவும், திட்டமிட்டு நடுவரை தாக்கவில்லை எனவும், குறிப்பிட்டுள்ளார். நடுவருக்கு தன்னால் ஏற்பட்ட மன அழுத்தத்திற்கு தான் மன்னிப்பு கேட்பதாகவும், ஜோகோவிக் தெரிவித்துள்ளார்.