பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரஃப் மொர்டாசாவுக்கு கொரோனா தொற்று உறுதி
Jun 21 2020 4:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரஃப் மொர்டாசாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பங்களாதேஷில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்து 425 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஷ்ரஃப் மொர்டாசாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதே போல், பங்களாதேஷ் அணி கிரிக்கெட் வீரர்கள் Nazmul Islam, Nafees Iqbal ஆகியோரும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடிக்கு, அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.