ஐ.பி.எல். கிரிக்கெட்டை பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்ப்பதால், பார்வையாளர்கள் இன்றி போட்டி நடத்தலாமா? - சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தகவல்
Jun 11 2020 4:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஐ.பி.எல். கிரிக்கெட்டை, ரசிகர்கள், வீரர்கள், ஸ்பான்சர்கள் என பலரும் எதர்ப்பார்ப்பதால், இந்த ஆண்டு போட்டியை, பார்வையாளர்கள் இன்றி நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரடங்கால், வெளிநாட்டு வீரர்கள் இந்தியா வர முடியாத அளவுக்கு பயணக்கட்டுப்பாடுகள் இருப்பதால் போட்டிகளை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனிடையே தற்போது விமான போக்குவரத்து தொடங்கி உள்ளதால், ரசிகர்கள் இன்றி காலி மைதானத்தில் போட்டியை நடத்த முடியுமா? என ஆலோசிக்கப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி கூறினார்.
ரசிகர்கள், அணிகளின் உரிமையாளர்கள், வீரர்கள், ஒளிபரப்பாளர்கள், ஸ்பான்சர்கள் என அனைவரும் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை மிகவும் எதிர்ப்பார்ப்பதால், அது குறித்து ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்தார். இது தொடர்பாக, மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கங்குலி குறிப்பிட்டார்.