கொரோனா எதிரொலி - ஐ.பி.எல். கிரிக்கெட் நடைபெறுமா? : வரும் 14-ம் தேதி ஐ.பி.எல். நிர்வாகக் குழு ஆலோசனை
Mar 12 2020 10:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை நடத்துவதா அல்லது ஒத்தி வைப்பதா என்பது குறித்து வரும் 14-ம் தேதி ஐ.பி.எல். நிர்வாகக் குழு ஆலோசனை நடத்தி முடிவு செய்ய உள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நடைபெறுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். போட்டி இம்மாதம் 29-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் எதிரொலியாக, ஐ.பி.எல். தொடரை ஒத்தி வைப்பது குறித்து, பிசிசிஐ ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. எனினும், போட்டி தொடங்குவதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால், ஒத்திவைப்பது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என பிசிசிஐ தெரிவித்தது. இந்நிலையில், இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை, நடத்துவதா அல்லது ஒத்தி வைப்பதா என்பது குறித்து ஐ.பி.எல். நிர்வாகக் குழு வரும் 14-ம் தேதி ஆலோசித்து முடிவு செய்கிறது.