காரத்தே சாம்பியன்ஷிப் போட்டி : காஞ்சிபுரம் மாணவர்கள் சாதனை
Feb 17 2020 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழ்நாடு மாநில கராத்தே சாம்பியன்ஷிப் அமைப்பின் சார்பில் சென்னை பரங்கிமலையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த கராத்தே மாணவர்கள் 10 பேர் தங்கப் பதக்கத்தையும் 5 பேர் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். மாநில அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கட்டா மற்றும் குமித்தோ பிரிவில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் வரும் மார்ச் மாதம் பெங்களூருவில் நடைபெறும் தென் மாநிலங்களுக்கான கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளனர்.