விருதுநகரில் மாநில அளவிலான கபடி போட்டி : 9 மாவட்டங்களைச் சேர்ந்த 55 அணிகள் பங்கேற்பு
Feb 16 2020 4:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இரவு பகல் ஆட்டம் என இரண்டு நாட்கள் நடைபெற்ற கபடி போட்டியில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சென்னை, கோவை, சேலம், கரூர் ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த 55 அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டியில் முதல் இடத்தை விருதுநகர் மாவட்டம் தோணுகால் அணியும், இரண்டாவது இடத்தை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அணியும் 3-வது இடத்தை கரூர் மாவட்ட அணியும் கைப்பற்றியது. மூன்று இடங்களைப் பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.