திருவண்ணாமலையில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் : பல்வேறு இடங்களில் இருந்து 1350 பேர் பங்கேற்பு
Feb 13 2020 4:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலையில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில், மாவட்டம் முழுவதிலும் இருந்து 25 வயதுக்கு உட்பட்ட பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை, போளூர், ஆரணி, செங்கம், கலசப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். கூடைப்பந்து, கைப்பந்து, கபடி மற்றும் ஹாக்கிப் போட்டிகளில் ஆயிரத்து 350க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.