ஜுனியர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி முடிவில் வாக்குவாதம் செய்த 5 வீரர்கள் மீது ஐசிசி நடவடிக்கை
Feb 12 2020 3:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பத்தொன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதி போட்டியில், அநாகரீகமாக நடந்து கொண்ட புகாரில் 5 வீரர்கள் மீது, ஐசிசி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இப்போட்டியில் பங்களாதேஷ் அணி, இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆட்டம் முடிந்தபிறகு, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணி வீரர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்தநிலையில் ஐசிசி விதிகளின்படி, பங்களாதேஷ் அணியின் தவ்ஹீத் கிரிதாய், சமீம் ஹுசைன், ரகிபுல் ஹாசன் மற்றும் இந்திய அணியின் ஆகாஷ் சிங், ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு, 4 முதல் 10 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.