தூத்துக்குடியில் பள்ளி மாணவிகளுக்கு இடையே மண்டல அளவில் நடைபெற்ற கடற்கரை கைப்பந்து போட்டி, பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது
Nov 1 2014 7:54AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
விளையாட்டுத் துறையில் மாணவ-மாணவிகள் அதிக ஈடுபாட்டுடன் கலந்துகொள்ளும் வகையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாவட்டம்தோறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியில், பள்ளி மாணவர்களுக்கு இடையில், மண்டல அளவில் கடற்கரை கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில், நெல்லை, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவிகள் 120 பேர் கலந்துகொண்டனர். வயது அடிப்படையில் 3 பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில், மாணவிகள் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி போட்டிப்போட்டுக் கொண்டு விளையாடியது பார்வையார்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், திறமையாக விளையாடிய மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் விரைவில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்பார்கள் என விளையாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.