தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன
Aug 27 2014 11:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாணவ, மாணவிகளின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், 70-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். கைப்பந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், ஹாக்கி என 14 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதேபோல், தூத்துக்குடியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. 4 பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற போட்டியில் ஓட்டப்பந்தயம், தட்டெறிதல், ஈட்டி எறிதல் என பல்வேறு பிரிவுகளில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர். திருச்சியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.