தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன

Aug 27 2014 11:58AM
எழுத்தின் அளவு: அ + அ -

மாணவ, மாணவிகளின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் வகையில் தூத்துக்குடி, திருவண்ணாமலை உள்ளிட்ட நகரங்களில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற போட்டியில், 70-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். கைப்பந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், ஹாக்கி என 14 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. முதல் 3 இடங்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதேபோல், தூத்துக்குடியில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் மண்டல அளவிலான இறகுப்பந்து போட்டி நடைபெற்றது. 4 பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில், 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற போட்டியில் ஓட்டப்பந்தயம், தட்டெறிதல், ஈட்டி எறிதல் என பல்வேறு பிரிவுகளில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர். திருச்சியில் 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் மற்றும் ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொண்டு தங்கள் திறனை வெளிப்படுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00