தாய்லாந்தில் யானைகள் போலோ - வழக்கமான உற்சாகத்துடன் தொடக்கம்
Aug 29 2013 6:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தாய்லாந்தில் ஆண்டுதோறும் நடைபெறும் யானைகள் போலோ விளையாட்டு, வழக்கமான உற்சாகத்துடன் தொடங்கியது.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், தாய்லாந்தில் நடத்தப்படும் இப்போட்டியில், 50-க்கும் மேற்பட்ட யானைகள் பங்கேற்றுள்ளன. புத்த சாமியார்கள் தண்ணீர் தெளித்து, பழக்கூடைகளை அளித்து, ஆசிர்வாதம் வழங்கினர். இதனைத்தொடர்ந்து, போலோ விளையாட்டில் யானைகள் பங்கேற்றன. யானை மீது அமர்ந்த வீரர்களும், பாகனும் பந்தை அடித்து விரட்டி விளையாடினர். தாய்லாந்தில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் யானைகள் போலோ போட்டி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.