உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குடும்பத்தினருக்கு தங்குமிட வசதி: ஒரு வாரத்திற்குள் ஏற்பாடு செய்ய டெல்லி மகளிர் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவு`
Oct 11 2019 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை ஒரு வாரகாலத்திற்குள் செய்ய வேண்டுமென, டெல்லி மகளிர் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில், பா.ஜ.க எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கரால், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக, இளம்பெண் ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு புகார் அளித்தார். இதையடுத்து, செங்கர் கைது செய்யப்பட்டு, உத்தரப்பிரதேசத்தில் உள்ள சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் அண்மையில் சென்ற கார் விபத்துக்குள்ளானதில், அப்பெண்ணின் உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பாதிக்கப்பட்ட பெண், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக எய்ம்ஸ் மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட டெல்லி மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரியிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினருக்கான தங்குமிட வசதியை இறுதி செய்ய ஒரு வார காலம் அனுமதி வழங்க வேண்டுமென டெல்லி மகளிர் ஆணையம் விடுத்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், அனுமதி வழங்கி உத்தரவிட்டது.