அதிக இறக்குமதி வரி விதித்து, தொடர்ந்து நெருக்கடி தரும் இந்தியா - அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கவலை
Feb 21 2020 1:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அதிக இறக்குமதி வரி விதித்து, அமெரிக்காவுக்கு, இந்தியா, தொடர்ந்து நெருக்கடி அளித்து வருவதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வரும் 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொள்கிறார். அஹமதாபாத், ஆக்ரா, புதுடெல்லி ஆகிய நகரங்களில் அவருடைய பயணத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அஹமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள Motera விளையாட்டு மைதானத்தில் 'Namaste Trump' என்ற பெயரில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதனிடையே, டிரம்பின் வருகைக்கு முன்னர், இரு நாடுகள் இடையே, சிறிய அளவிலான வர்த்தக சலுகைகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளியாகிவுள்ளன.
இந்நிலையில், அதிபர் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், அமெரிக்காவுக்கு எதிராக அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பிரதமர் திரு. மோதி தனக்கு நல்ல நண்பர் என்றாலும், வர்த்தகம் குறித்து அவருடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.