கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, 'கிருஷ்ண தர்ஷன்' கண்காட்சி : ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் தொடக்கம்
Aug 29 2015 7:04AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில், கிருஷ்ண தர்ஷன் என்ற விற்பனைக் கண்காட்சி தொடங்கியுள்ளது.
கிருஷ்ணஜெயந்தி, வரும் 5-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஈரோட்டில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் தொடங்கியுள்ள கிருஷ்ணதர்ஷன் கண்காட்சியில், விதவிதமான கிருஷ்ணர் பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. காகிதக் கூழ், களிமண் போன்ற பல்வேறு மூலப்பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கிருஷ்ணர் பொம்மைகள், சந்தன மரம், தஞ்சை ஓவியம், வெள்ளை நிற உலோகத்தில் உருவாக்கப்பட்ட பொம்மைகள் என ஏராளமான கிருஷ்ணர் பொம்மைகள் இடம்பெற்றுள்ளன. 100 ரூபாய் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில், விற்பனை செய்யப்படும் பொம்மைகளுக்கு 10 சதவீத தள்ளுபடி அளிக்கப்படுகிறது. கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டு, கிருஷ்ணர் பொம்மைகளை வாங்கிச் செல்கின்றனர்.