தாயைப்போல வளர்த்து வந்த பெண் உயிரிழந்ததால் துக்கம் : மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட நாய்
Jul 5 2020 3:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாய் என்றாலே நன்றிக்கு உதாரணம் சொல்வார்கள். அதை இந்தச் சம்பவம் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது. ஆனால் அதை ஒரு துக்கமான நிகழ்வு மூலம் நிரூபித்திருப்பதுதான் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது. கான்பூர் மாவட்டம் மாலிக்புரம் பகுதியைச் சேர்ந்த பெண்மணி, சிறுநீரகம் பாதித்து மரணம் அடைந்த நிலையில், அவர் வளர்த்து வந்த பெண் நாயும், மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்பு, சாலையில் இருந்த இந்த நாயைவீட்டுக்குக் கொண்டு வந்து தனது மனைவி பராமரித்ததாகவும், இந்த நாயும் வீட்டில் ஒருவராகவே வைத்துப் பார்க்கப்பட்டதாகவும் அனிதாவின் கணவர் ராஜ்குமார் கூறியுள்ளார். மருத்துவத் தம்பதி வளர்த்து வந்த நாயின் இறப்புப் பற்றிய செய்தி, அப்பகுதியில் காட்டுத்தீப் போல பரவி, நகர் முழுவதும் நாயின் இறப்புப் பற்றிய பேச்சே முழுக்க ஒலித்து வருகிறது.