கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் பணம் கைமாறிய விவகாரம் - தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்டோர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை - மத்திய அமலாக்கத்துறை நடவடிக்கை

Apr 22 2014 6:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் பணம் கைமாறியது தொடர்பாக, கருணாநிதியின் மகள் கனிமொழி, மனைவி தயாளு, கலைஞர் டிவி முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் உள்ளிட்டோர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கருணாநிதி குடும்பத்தினர் நடத்தும் கலைஞர் டிவிக்கு, 214 கோடி ரூபாய் பணம் கைமாறியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில், கருணாநிதியின் மகள் கனிமொழி, மனைவி தயாளு, முன்னாள் நிர்வாக இயக்குநர் சரத்குமார் மற்றும் வினோத் கோயங்கா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இப்பணம் கைமாறியதில், கனிமொழிக்கு உதவி செய்ததாக தி.மு.க. முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீதும் குற்றபத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், பணத்தை கைமாற்றிக் கொடுத்த சினியுக் நிறுவன இயக்குநர் கரீம் மொரானி மற்றும் ஷாகித் பால்வா, ஆசிஃப் பால்வா ஆகியோர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனையடுத்து, அமலாக்கப்பிரிவினர் டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இவர்கள் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00