மத்திய அரசின் குடியுரிமை சட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு - உச்சநீதிமன்றத்தில் ஓவைசி சார்பில் வழக்கு
Dec 14 2019 6:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திரு.அசாதுதீன் ஓவைசி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததையடுத்து, இம்மசோதா சட்டமாக நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரபுராவில் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் வெடித்தன. மேற்குவங்கம், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநில அரசுகளும் இந்த குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
குடியுரிமைத் சட்டத்தை எதிர்த்து ஏற்கனவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் திரிணாமுல் கட்சியின் எம்.பி. திரு.மஹுவா மொய்த்ரா, காங்கிரஸ் எம்.பி. திரு.ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நேற்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம் தலைவர் திரு. அசாதுதீன் ஓவைசி குடியுரிமை சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.