குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் வலுக்கிறது எதிர்ப்பு - அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தீவிரமடையும் போராட்டம்
Dec 12 2019 2:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அசாம் மாநிலம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருவதையடுத்து, அம்மாநிலத்திற்கான விமானப் போக்குவரத்தை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது.
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகிழக்கு மாநிலமான அசாமில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. கவுஹாத்தியில், கடைகள் மற்றும் வாகனங்களை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியதோடு, அவற்றை தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் தீவிரமடைந்து வருவதையடுத்து, அம்மாநிலத்தின் சிவசாகர், Jorhat உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 24 மணி நேரத்திற்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் அசாதாரணமாக சூழல் நிவவுதால், Dibrugarh நகருக்கு வரும் விமானங்களையும், அங்கிருந்து புறப்படும் விமானங்களையும், இண்டிகோ நிறுவனம் ரத்து செய்துள்ளது. மேலும், அசாம் மற்றும் திரிபுராவில் இன்று நடைபெறவிருந்த ரஞ்சி கோப்பை போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.