ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான 3-ம் கட்ட தேர்தல் - பல்வேறு இடங்களில் இன்று விறுவிறுப்பான வாக்குப்பதிவு
Dec 12 2019 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், 17 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே இரண்டு கட்ட தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில், 3ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பலரும் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்குகளை செலுத்தி வருகின்றனர். வாக்குப்பதிவு நடைபெறும் 7 ஆயிரத்து 16 வாக்கு சாவடிகளில் 2 ஆயிரத்து 14 வாக்குச் சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளன. தோ்தல் பணியில் 40 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபட உள்ளதாகவும், தோ்தல் சுமுகமாகவும், அமைதியாகவும் வாக்களிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அந்த மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி வினய்குமார் சௌபே தெரிவித்தார்.