ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மாநிலங்களில் நிலவும் கடும் பனிப்பொழிவு - சாலைகளை பனி சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
Dec 12 2019 2:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவின் பெரும்பாலான பகுதிகளை பனி சூழ்ந்துள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹிமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில், தற்போது பனிப்பொழிவு சீசன் தொடங்கியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கேதர்நாத் கோவில் முழுவதும், பனியால் மூடப்பட்டுள்ளது. இதே போல், ஹிமாச்சல பிரதேச மாநில தலைநகர் சிம்லாவின் நர்கண்டா என்ற பகுதி முழுவதும் பனியால் சூழப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் பனியால் மூடப்பட்டுள்ளதால், வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.