அயோத்தி மறு ஆய்வு மனுக்கள் ஏற்பதா? வேண்டாமா? : இன்று முடிவு செய்கிறது அரசியல் சாசன அமர்வு
Dec 12 2019 2:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை ஏற்பதா வேண்டாமா என்று, அரசியல் சாசன அமர்வு இன்று முடிவு செய்ய உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி வழக்கின் தீர்ப்பில், சர்ச்சைக்குரிய 2 புள்ளி 7 ஏக்கர் நிலம் அரசால் ஏற்படுத்தப்படும் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் ராமர் கோவில் கட்டப்படுவதை அந்த அறக்கட்டளை மேற்பார்வையிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு ஈடாக முஸ்லீம்களுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கி மசூதி கட்டித் தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது. இதனை மறு ஆய்வு செய்யக் கோரி 18 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இவற்றை திறந்தவெளி நீதிமன்றத்தில் விசாரிப்பதா அல்லது ரகசிய விசாரணையாக மூடிய கதவுகளுக்குள் விசாரிப்பதா என்பதையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று முடிவு செய்ய உள்ளது.