பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது அளித்த புகாரை திரும்பப்பெறக்கோரி பெண் மீது அமிலம் வீச்சு - உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்
Dec 8 2019 5:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேச மாநிலம் முசாஃபர் நகரில், பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது அளித்த புகாரை திரும்பப்பெறக்கோரி இளம்பெண் மீது, அமிலம் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில், பாலியல் வன்கொடுமை செய்த நபர்கள் மீது புகாரளித்த இளம்பெண், எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்தே, மக்கள் இன்னும் மீளாதநிலையில், அம்மாநிலத்தின் முசாபர்நகரில், இதேபோன்று மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது காவல்நிலையத்தில் புகாரளித்தும் உரிய ஆவணங்கள் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை திரும்பப்பெற வலியுறுத்தி குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும், அப்பெண் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அமிலத்தை வீசிவிட்டு தப்பி ஓடினர். பலத்த காயமடைந்த அப்பெண், மீரட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தப்பி ஓடிய நால்வரையும் தேடி வருவதாக முசாபர்நகர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.