உத்தரபிரதேசத்தில் திருமண வீட்டில் நடமாடிய இளம்பெண் மீது துப்பாக்கி சூடு - சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி
Dec 6 2019 6:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரபிரதேச மாநிலத்தில் நடனப் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுடப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் சித்திரகூட் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நடந்த திருமணத்தில், இளம்பெண் தமது குழுவினருடன் நடனமாடிக் கொண்டிருந்தார். திடீரென அவர் நடனத்தை நிறுத்தவே தொடர்ந்து நடனம் ஆடுமாறு பார்வையாளர் வரிசையில் இருந்த ஒருவர் கூறியுள்ளார். அந்த நபரிடம் நடனப் பெண்மணி ஏதோ கேட்க அடுத்த சில நொடிகளில் அந்த நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் பெண்மணியின் முகத்திலேயே சுட்டுள்ளார். இந்த வீடியோ வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சுட்ட நபர் குடிபோதையில் இருந்ததாகவும், அவர் கிராமத் தலைவரின் உறவினர் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர். கான்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் குணமடைந்து வரும் நிலையில் துப்பாக்கியால் சுட்டவரை போலீஸார் இன்னும் தேடி வருகின்றனர்.