நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கு - மத்திய அரசு பதிலளிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
Dec 6 2019 9:10PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்க மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி உயர்நீதிமன்றத்தில் குஷ் கல்ரா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில், நாடு முழுவதும் ஏராளமான ரயில் நிலையங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், பெரும்பாலான ரயில் நிலையங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். ரயில் நிலையங்களில் தாக்குதல் உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதாகவும், ரயில் நிலையங்கள் தீவிரவாத தாக்குதலுக்கு எளிதில் ஆளாவதாகவும் தெரிவித்திருந்தார். மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.என். படேல் மற்றும் நீதிபதி ஹரி ஷங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.