குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஆளுநர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு - டெல்லியில் நாளை தொடக்கம்
Nov 22 2019 7:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் தலைமையில், ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு, நாளை மற்றும் நாளை மறுநாள் டெல்லியில் நடைபெற உள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையில், நாளை மற்றும் நாளை மறுநாள், அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் பங்கேற்கும் மாநாடு, குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெற உள்ளது. இது, குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் 50-வது மாநாடு ஆகும்.
இரு நாட்கள் நடைபெறும் மாநாட்டில், பழங்குடியினர் விவகாரங்கள், வேளாண் சீர்திருத்தம், உயர் கல்விக்கான புதிய கல்விக் கொள்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இந்த மாநாட்டில், குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கைய நாயுடு, பிரதமர் திரு. நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா மற்றும் மூத்த கேபினட் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.