இ-சிகரெட் உற்பத்தி, இறக்குமதி, விற்பனையை தடை செய்வதற்கான மசோதா மக்களவையில் இன்று தாக்கல்
Nov 22 2019 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இ-சிகரெட் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனையை தடை செய்வதற்கான மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு, மத்திய அரசு, கடந்த செப்டம்பர் மாதம் தடை விதித்தது. இந்தியாவில், இ-சிகரெட் பயன்பாடு 77 சதவீதம் அதிகரித்ததால், தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இ-சிகரெட் உற்பத்தி, இறக்குமதி மற்றும் விற்பனையை தடை செய்வதற்கான மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இ-சிகரெட் தொடர்பான தடையை மீறுவோருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.