ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு : ப.சிதம்பரத்திடம் திஹார் சிறையில் அமலாக்கத்துறை விசாரணை - டெல்லி நீதிமன்றம் அனுமதி

Nov 22 2019 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஐ.என்.எக்‍ஸ். மீடியா வழக்‍கில் திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் அமலாக்‍கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக, சி.பி.ஐ-யும், அமலாக்‍கத்துறையும் தனித்தனியாக வழக்‍கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இவ்வழக்‍கில், கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், நீதிமன்ற காவலில் திஹார் சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளார். சி.பி.ஐ. தொடர்ந்த வழக்‍கில் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், அமலாக்‍கத்துறை வழக்‍கில், ஜாமின் மனு, விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், திஹார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம், இன்றும், நாளையும், 2 நாட்கள், நேரில் விசாரணை நடத்த அமலாக்‍கத்துறைக்‍கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, சிதம்பரத்திடம் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை விசாரணை நடைபெற்றது. மீண்டும் பிற்பகல் 2.30 மணி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00