இந்தியாவுடனான தபால் சேவையை மீண்டும் தொடங்கியுள்ள பாகிஸ்தான் - பார்சல்களுக்கு தடை தொடருமென அறிவிப்பு
Nov 19 2019 7:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவுடனான தபால் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை, மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான ரயில் சேவை, தபால் சேவை, வர்த்தக உறவுக்கு தடை விதித்து. தற்போது, இந்தியாவுடனான தபால் சேவையை மீண்டும் தொடங்கியுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இன்று மாலை, அட்டாரி - வாகா எல்லையில் 7 கடிதங்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுமென பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்தியாவில் இருந்து வரும் பார்சல்களுக்கான தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.