புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி சட்ட சபையை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க-வினர் கைது
Nov 19 2019 6:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வலியுறுத்தி, சட்டசபையை முற்றுகையிட முயற்சித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பா.ஜ.க-வினரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடத்தப்படாமல் உள்ள உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி, பாஜக சார்பில் இன்று சட்டசபை முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சாமிநாதன் எம்எல்ஏ தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர், சம்பா கோவிலில் இருந்து பேரணியாக சட்டசபையை முற்றுகையிட வந்த போது, ஆம்பூர் சாலை அருகே போலீசார் தடுப்பு ஏற்படுத்தி அவர்களை தடுத்து நிறுத்தினர். தடுப்பு வேலியை தள்ளிவிட்டு சட்டசபையை முற்றுகையிட முயன்ற அவர்களை போலீசார் கைது செய்தனர். உள்ளாட்சித் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், பா.ஜ.க சார்பில் நீதிமன்றத்தை அணுகுவோம் என எச்சரித்தனர்.