2025ம் ஆண்டில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார வலிமை பெற்ற நாடாக இந்தியா இருக்கும் - மக்களவையில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தகவல்
Nov 19 2019 11:21AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ந்துவரும் நாடாகவே உள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார். மக்களவை நேற்று பேசிய ஆம் ஆத்மி எம்.பி. பாக்வந்த் மான், இந்திய பொருளாதாரத்தில் 5 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிட்டார். இதனை மறுத்த நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், இந்தியா தொடர்ந்து பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் நாடாகவே இருப்பதாக குறிப்பிட்டார். 2025-ம் ஆண்டில் இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார வலிமை பெற்ற நாடாக இருக்கும் என்றும் கூறினார். ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்ட பின்னர், உலக வங்கியின் எளிதாக தொழில் தொடங்குவதற்கான நாடுகள் பட்டியலில் தற்போது இந்தியா 14 இடங்கள் முன்னேறி 63-ம் இடத்தில் உள்ளதாகவும் மத்திய அமைச்சர் தாகூர் குறிப்பிட்டார்.