மாநிலங்களவை மறுவரையறை தொடர்பான சட்டங்களில் மாநிலங்களவைக்கான அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்கை
Nov 19 2019 11:01AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாநிலங்களவை மறுவரையறை செய்வது தொடர்பான சட்டங்களில் மாநிலங்களவைக்கான அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையின் 250-ஆவது கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய திரு.மன்மோகன் சிங், முக்கியமான விவகாரங்கள் நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்பாக, அதுதொடா்பாக மாநிலங்களவையில் மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும் - மாநிலங்களவையின் செயல்பாடு நிறைவானதாக இருப்பதற்கு, சட்ட மசோதாக்களை நாடாளுமன்றக் குழுக்கள் முழுமையாக ஆராய வேண்டும் என்றும் தெரிவித்தார். அதுபோன்ற விவகாரங்களில் அவை உறுப்பினா்களின் கருத்துகளை மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கோரலாம் என்றும் திரு.மன்மோகன் சிங் தெரிவித்தார்.